×

இது வரை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?

 

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படங்களுள் முக்கியமான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ . இந்த படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இணைந்து நடித்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதற்கு முன்னர் பாபி சிம்ஹா, சித்தார்த், லெட்சுமிமேனன் கூட்டணியில் வெளியான ஜிகர்தண்டா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. அதனை டபுள் எக்ஸ் படம் பூர்த்தி செய்தது. நல்ல விமர்சனம் கிடைத்த நிலையில் மக்கள் தியேட்டர்களில் படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் இது நாள் வரை படம் எவ்வளவு தொகையை வசூலாக பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது அதன்படி படம் நவம்பர் 10ஆம் தேதி முதல் தற்போது வரை உலக அளவில் ரூ. 60கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.