×

திருமணத்திற்கு பிறகும் நெருக்கமான காட்சிகளுக்கு ”நோ” சொல்லாத நடிகை !

பொதுவாக திருமணத்துக்கு பிறகு படத்தில் நடிக்கும் நாயகிகள் பலரும் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என அலட்டிக் கொள்வர். ஆனால் நடிகை காஜலோ இதுவரை கமிட்டான படங்களில் எதற்குமே அப்படி ஒரு கண்டிஷன் போடவே இல்லையாம். நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் 30 தேதி கௌதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கிடையே 10 வருடமாக பழக்கம் இருந்ததாம் ஆனால் கொரோனா ஹோம் quarantine டைமில் தான் இவர்கள் காதலை உணர்ந்து திருமண பந்தத்தில் இணைத்தனராம்.
 

பொதுவாக திருமணத்துக்கு பிறகு படத்தில் நடிக்கும் நாயகிகள் பலரும் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என அலட்டிக் கொள்வர். ஆனால் நடிகை காஜலோ இதுவரை கமிட்டான படங்களில் எதற்குமே அப்படி ஒரு கண்டிஷன் போடவே இல்லையாம்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் 30 தேதி கௌதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கிடையே 10 வருடமாக பழக்கம் இருந்ததாம் ஆனால் கொரோனா ஹோம் quarantine டைமில் தான் இவர்கள் காதலை உணர்ந்து திருமண பந்தத்தில் இணைத்தனராம்.


தற்போது ஹனிமூன் எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பிய காஜல் கொஞ்சம் கொஞ்சமாக தனது படவேலைகளில் இறங்கி வருகிறார். சமீபத்தில் கூட சென்னைக்கு சீக்ரெட்டாக வந்து தனது புதிய படப்பிடிப்பிற்கான போட்டோஷூட்டில் கலந்துகொண்டு சென்றுள்ளார் காஜல்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு காஜல் இப்படி நடிக்க மாட்டேன் அப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லிவிடுவாரோ என்று இயக்குனர்களுக்கு திடீரெனெ சந்தேகம் எழுந்ததாம். ஆனால் காஜல் அகர்வால் அப்படி எந்த ஒரு ஐடியாவிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.காஜல் பொறுத்தவரை ஒர்க் தான் பர்ஸ்ட் மத்ததெல்லாம் நெஸ்ட் தானாம்.

இவர் திருமணத்திற்கு பின்னர் கூட சிரஞ்சீவியின் ”ஆச்சார்யா” படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதனால் தனது ஹனிமூன் திட்டத்தைத் தள்ளி வைத்திருப்பதாகவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

காஜல் அகர்வால் கைவசத்தில் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் இந்தியன்-2 ,ஏய் சினாமிகா,குயின் ரீமேக் போன்ற திரைப்படங்கள் உள்ளன.