×

கீர்த்திக்கு பதிலாக இணைந்த கன்னட நடிகை..  பாலா 'வணங்கான்'  புதிய அப்டேட்

 

பாலாவின் 'வணங்கான்' படத்தில் கன்னட நடிகை ஒருவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

முன்னணி இயக்குனர் பாலா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவை வைத்து 'வணங்கான்' திரைப்படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படியே படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் தொடங்கியது. அங்கு சூர்யா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது சூர்யா மற்றும் பாலா இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் படத்தில் இருந்து வெளியேறுவதாக சூர்யா அறிவித்தார். சூர்யாவின் சொந்த நிறுவனமான 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வந்தது. ஜி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வந்தார். சூர்யா விலகி விட்டதால் படத்தில் சில மாற்றங்களை இயக்குனர் பாலா செய்து வந்தார்.‌

 

இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில் 'வணங்கான்' படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் கால்ஷீட் இல்லாததால் விலகிவிட்டார். அதனால் கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் அவர் 'ஜடா', ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.