×

மறுபடியும் முதல்ல இருந்தா? கர்ணன் படத்திற்காக மீண்டும் செட் அமைக்கும் படக்குழு!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் தனி கிராமம் போன்ற செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினர். கொரோனாவுக்கு முன்னரே கர்ணன் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது கொரொனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக
 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் தனி கிராமம் போன்ற செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினர். கொரோனாவுக்கு முன்னரே கர்ணன் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது கொரொனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்ணன் படப்பிடிப்பில் சிக்கல் உருவாகியுள்ளது. செட் போடப்பட்ட இடத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் படக்குழுவினர் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்று தடை விதித்துவிட்டார்களாம். படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை.

இதையடுத்து தனுஷும் தான் அந்தக் கிராமத்துக்கு வரமாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம். தற்போது சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் அதே போல செட் அமைத்து வருகின்றனர். இன்று (அக்டோபர் 16) முதல் அங்கு படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.