×

படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை உடைத்து விடாதீர்கள் - கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்

 

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்களான சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த பாகத்திற்கு ஜிகர்தண்டா பபுள் எக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் நடிகர்களான ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளானர். வரும் தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. 

படம் குறித்து பதிவிட்ட கார்த்திக் சுப்பராஜ், 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.