×

‘ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி….'- கயல் ஆனந்தி கிளிக்ஸ்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தின் மூலமாக நடிகியாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஆனந்தி. அந்த படம் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியதால் கயல் ஆனந்தியாக நிலைத்துவிட்டார். தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னோரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரனை, பரியேரும் பெருமாள், ராவண கோட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் துணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கும் ஒரு குழந்தை உள்ளது.

என்னதான் குடும்பம், குழந்தை என ஆன போதிலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆனந்தி சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். அந்த வகையில் தற்போது அவர் வெளிட்யிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சுடிதார் அணிந்து வந்த தேவதை என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.