×

மிரட்டலாக உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்'... அருள்நிதி படத்தின் ரிலீஸ் அறிவிப்பு !

 

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. இந்த படத்தில் மிரட்டலான மீசையுடன் சண்டியராக அருள்நிதி நடித்துள்ளார். மூர்க்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்து வருகிறார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மே 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.