×

ரஜினியின் கூலி ரசிகர்ளுக்கு விருந்து கொடுத்ததா ?-திரை விமர்சனம் 

 
கூலி படத்தில் ஹாஸ்டல் வார்டனாக வரும் ரஜினிகாந்த் கலகலப்பான நடிப்பால் கவர்ந்து இழுக்கிறார். நின்றால், நடந்தால், ஆடினால் என தான் வரும் ஒவ்வொரு அசைவுகளிலும் ஸ்டைல் காட்டி அசர வைக்கிறார் ரஜினிகாந்த். ஆக்சன் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் 30 வருடங்களுக்கு முன்பு அவரது தோற்றத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது .இப்படத்தின் கதை பின்வருமாறு :
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தனது கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை வேட்டையாடி வருகிறார்.அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.இதற்கிடையில் தனது நண்பர் சத்யராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் ரஜினிகாந்த், அவரது சாவில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் துணையுடன் சத்யராஜை கொன்றவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்கிறார்.
அப்போது நாகார்ஜுனாவின் கூடாரத்துக்கே சென்று அவரை சந்திக்கும் சூழ்நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படுகிறது. அப்போது, துறைமுகத்தில் கொல்லப்படுபவர்களின் உடல்களை தான் கண்டுபிடித்த நவீன எந்திரத்தின் மூலமாக சத்யராஜ் சாம்பலாக்கி அப்புறப்படுத்தி வந்தது தெரிய வருகிறது. மேலும் சத்யராஜை,
நாகார்ஜுனாவின் ஆட்கள்தான் கொலை செய்ததும் ரஜினிகாந்துக்கு தெரிய வருகிறது.
சத்யராஜை கொலை செய்தது ஏன்? தனது உயிர் நண்பன் மரணத்துக்கு ரஜினிகாந்த் பழிதீர்த்தாரா? ரஜினிகாந்த் - நாகார்ஜுனா இடையேயான மோதல் என்ன ஆனது?இருவருக்கும் உள்ள பின்னணி என்ன? ரஜினிகாந்தின் பின்புலம் என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை