×

காஷ்மீரில் இருந்து திடீரென சென்னை திரும்பியது ஏன் ?.. திரிஷா குறித்து வெளியான பரபரப்பு தகவல் !

 

காஷ்மீரில் இருந்து நடிகை திரிஷா சென்னை திரும்பியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பிலிருந்து மூன்றே நாளில் நடிகை திரிஷா சென்னை திரும்பினார். இதனால் சந்தேகம் அடைந்த ரசிகர்கள், ‘லியோ’ படத்திலிருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக பல்வேறு கருத்துக்களை பரப்பி வந்தனர். 

இந்நிலையில் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் காஷ்மீரில் அதிகப்படியான குளிர் இருக்கிறது. அதிலும் பனி சூழ்ந்த பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அந்த குளிரை திரிஷாவால் தாங்க முடியவில்லையாம். அதனால் உடல்நிலை சரியில்லாததால் சென்னை திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கடுமையான குளிரை தாங்கிக் கொண்டுதான் நடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.