×

சிம்புக்கு இவர்தான் வில்லனா ?…. மாநாடு குறித்து பிரபல இயக்குனர் டாக் !

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக அவரே கூறியுள்ளார். ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா
 

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக அவரே கூறியுள்ளார்.

‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மிகுந்த பொருட்செலவில் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், இந்தி,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகவும், இந்தியா சினிமாவில் இதுவரை வந்திராத புதுமையான படம் மாநாடு என்றும், பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.