×

மறக்குமா நெஞ்சம் : ஏசிடிசி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்.

 

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி நிகழ்ச்சி சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை, கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், பாலியல் சீண்டல், மூச்சு திணறல் என பலர் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து இணையத்தில் முறையிட்டனர். தொடர்ந்து தங்களுக்கு பணம் திரும்ப வேண்டும் என்றும் கூறி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ‘ஏ. ஆர் ரஹ்மானை யாரும் திட்டாதீர்கள், அவர் தனது வேலையை சிறப்பாக செய்தார். டிக்கெட்டுகான பணத்தை நாங்கள் திருப்பி கொடுத்துவிடுகிறோம்’ என கூறி வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஏசிடிசி நிறுவனத்திற்கு நேட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மொத்தமாக செலுத்தப்பட்ட டிக்கெட்டுகளில் 10% கேளிக்கை வரியாக செலுத்த வேண்டும். அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை அதனால் அதற்கு விளக்கம் அளிக்கும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.