×

துருவ் விக்ரம் படத்தை தொடங்கும் மாரி செல்வராஜ்... தலைப்பு குறித்து முக்கிய அப்டேட் !

 

 துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக மாறிவிட்டார் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கர்ணன் படத்தின் மூலம் தன்னை வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திக்கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 

இதையடுத்து தனுஷை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்கு முன்னரே துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருந்தார். ஆனால் உதயநிதி கேட்டுக்கொண்டதால் ‘மாமன்னன்’ படத்தில் கமிட்டானார். மாமன்னன் படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டதால் தற்போது மீண்டும் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். 

பா ரஞ்சித் நீலம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. தமிழக கபடி வீரர் ஒருவர், தேசிய அளவில் உயர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெல்வதே படத்தின் கதைகளமாக அமைக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘மனதி மைதான்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.