×

இயக்குனர் ராசு.மதுரவன் குடும்பத்திற்கு உதவ ‘மாயாண்டி குடும்பத்தார்-2’..!?

பூமகள் வந்தாள், கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை இயக்கியவர் ராசு.மதுரவன். வாய் புற்று நோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.குறுகிய காலத்தில் உயரத்தைத் தொடுவார் என்று நம்பப்பட்ட இயக்குனர்,தனக்கு இருந்த நோய் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததுதான் இவ்வளவு பெரிய இழப்புக்கு காரணம் என்று அவருடன் இருந்த நண்பர்கள் அப்போது சொன்னார்கள். கடைசியாக அவர் இயக்கிய படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் ராசு.மதுரவனின் கணவுப் படமான’ மாயாண்டி குடும்பத்தார் பார்ட் டூ
 

பூமகள் வந்தாள், கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை இயக்கியவர் ராசு.மதுரவன். வாய் புற்று நோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.குறுகிய காலத்தில் உயரத்தைத் தொடுவார் என்று நம்பப்பட்ட இயக்குனர்,தனக்கு இருந்த நோய் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததுதான் இவ்வளவு பெரிய இழப்புக்கு காரணம் என்று அவருடன் இருந்த நண்பர்கள் அப்போது சொன்னார்கள்.

கடைசியாக அவர் இயக்கிய படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் ராசு.மதுரவனின் கணவுப் படமான’ மாயாண்டி குடும்பத்தார் பார்ட் டூ இப்போது எடுக்கவிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மற்றபடி மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இந்தப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்கள்.

அந்தப்படம் வெளியாகி பெரிய ஹிட்டடித்தபோதே பார்ட் டூவுக்கான கதை பேச ஆரம்பித்துவிட்டார் ராசு.மதுரவன். அதனால்,அந்த டீமில் உள்ள அத்தனை பேருக்கும் அந்தக் கதையின் ஒன்லைன் தெரியும். ஊர் கூடி தேர் இழுப்பது போல் இப்போது ராசு.மதுரவனின் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இந்தப்படத்துக்கான வேலையில் இருக்கிறார்கள். அந்தப் படத்தில் நடித்த இயக்குனர்களில் ஒருவரான நந்தா பெரியசாமி தான் இந்தப்படத்தை இயக்கவிருக்கிறார்.

படம் முடிந்து வெளியாகும் போது படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியையுயும், நடிக்கும் நடிகர்கள் டெக்னீஷியன்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தையும் ராசு.மதுரவன் குடும்பத்திற்கு நிதியாக கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம்.நல்ல முயற்சி வாழ்த்துகள் ‘மாயாண்டி குடும்பத்தார்.