×

என் முதல் ப்ரோபோசல் நான் 6வது படிக்கும் போது வந்தது - நடிகை அனுஷ்கா ஓபன் டாக்..!  

 
நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கிய அனுஷ்காவிற்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் மார்க்கெட் அதிகரித்தது. ரெண்டு, வேட்டைக்காரன், சிங்கம் என வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார். கிளாமர், அழகு என அத்தனையும் அவருக்கு இருந்ததால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. கிளாமராக மட்டும்தான் அனுஷ்கா நடிப்பார் என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்த சூழலில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தாண்டவம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவர் ஏற்றிருந்தது ஹோம்லியான கதாபாத்திரத்தை. அந்த கேரக்டரிலும் தனது எக்ஸ்பிரெஷன் மற்றும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தாண்டவம் படத்தில் இடம்பெற்ற ஒருபாதி கதவு நீயடி பாடலில் அனுஷ்காவின் முக பாவனைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்தார் அனு. அந்தப் படங்கள் இந்திய அளவில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதுமட்டுமின்றி அனுஷ்காவும் இந்திய அளவில் ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துக்கொண்டிருந்தவர்; இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்து பின்னர் குறைக்க முடியாமல் திணற ஆரம்பித்தார். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சுத்தமாக நின்று போயின. அதனையடுத்து சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர்; மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது காதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.

இந்நிலையில் தனக்கு வந்த காதல் ப்ரோபோசல் குறித்து பேசியிருக்கிறார் அனுஷ்கா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தபோது எனது வகுப்பில் ஒரு பையன் படித்தான். அவன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன்’ என்று கூறினான். அப்போது ஐ லவ் யூ என்றால் என்னவென்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் அந்த ப்ரோபோசலுக்கு ஓகே என்று சொன்னேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது” என்றார்.