×

‘த்ரில்லர்’ படத்தை இயக்கும் நலன் குமாரசாமி… ஹீரோ யார்னு தெரியுமா ?

ஆரியா நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘சூது கவ்வும்’. இதில் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து
 

ஆரியா நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘சூது கவ்வும்’. இதில் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு சூப்பர் டீலக்ஸ், மாயவன் இரு படங்களின் ஸ்கிப்ட் பணியை கவனித்துள்ளார்.
அண்மையில் ‘குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார்.

இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை உருவாக்கவிருக்கிறார். அதற்கான முற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து புதிய படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.