×

விரைவில் வெளியாகிறது அமீரின் ‘நாற்காலி’ படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட்

பிரபல இயக்குனர் அமீர் நடிக்கும் நாற்காலி படம் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அமீர் ராம் உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். யோகி, வடசென்னை போன்ற படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதையடுத்து அமீர் நடித்து வெளிவரவிருக்கும் படம் நாற்காலி. அரசியல் பின்னணி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.
 

பிரபல இயக்குனர் அமீர் நடிக்கும் நாற்காலி படம் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அமீர் ராம் உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். யோகி, வடசென்னை போன்ற படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதையடுத்து அமீர் நடித்து வெளிவரவிருக்கும் படம் நாற்காலி. அரசியல் பின்னணி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அஜீத்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.

மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு என்ற பாடலை பாடியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், இம்மாத இறுதியில் படம் முடிக்கப்பட்டு மார்ச் மாதம் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.