×

‘மன்சூர் அலிகான்’ விவகாரம்- களத்தில் இறங்கிய ‘தேசிய மகளிர் ஆணையம்’!

 

முன்னணி நடிகை த்ரிஷா குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து நாகரீகமற்ற முறையில் பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகைகள் மாளவிகா மோகனன், குஷ்பு, ரோஜா என பலரும் தங்களது எதிர்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வரும் நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது எதிர்பை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மன்சூரின் இந்த அநாகரீகமான பேச்சுக்கு அவர் மீது வழக்கு பதிவு செய்ய  டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பலரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.