×

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பட நாயகிக்கு திருமணம்

 

நெஞ்முண்டு நேர்மையுண்டு  மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிரிகாஞ்சவ்லா. இதன் பிறகு தமிழில் வால்டர் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது தமிழில் மிஸ்டர் ஜூ கீப்பர், படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஷிரிகாஞ்சவ்லா சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக, ஏர் ஹோஸ்டஸாக பணி புரிந்து வந்தாராம். 
பின்னர், நடிப்பின் மீது ஆர்வத்தில் அந்த பணியை கைவிட்டு சினிமா பக்கம் திரும்பினார். 

 தற்போது அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அசார்முன் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணப் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.