×

பட பிரமோஷனுக்கு வர மறுப்பு… திரிஷா மீது தயாரிப்பு சங்கத்தில் புகார்…

‘பரமபத விளையாட்டு’ படத்தின் பிரமோஷனுக்கு நடிகை திரிஷா வர மறுப்பதால் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த திரிஷா, கடைசியாக ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சுந்தர் பாலு இயக்கும் ‘கர்ஜனை’ படத்திலும், எச்.வினோத் இயக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்திலும், எம்.சரவணனின் ‘ராங்கி’, சுமந்த் ராதாகிருஷ்ணனின் ‘சர்க்கரை’ உள்ளிட்ட படங்களை வரிசையாக கைவசம் வைத்துள்ளார்.
 

‘பரமபத விளையாட்டு’ படத்தின் பிரமோஷனுக்கு நடிகை திரிஷா வர மறுப்பதால் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த திரிஷா, கடைசியாக ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சுந்தர் பாலு இயக்கும் ‘கர்ஜனை’ படத்திலும், எச்.வினோத் இயக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்திலும், எம்.சரவணனின் ‘ராங்கி’, சுமந்த் ராதாகிருஷ்ணனின் ‘சர்க்கரை’ உள்ளிட்ட படங்களை வரிசையாக கைவசம் வைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘பரமபத விளையாட்டு’. திரிஷா முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஒடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு செய்து வருகிறது. இந்நிலையில் படத்தை பிரமோஷன் செய்ய திரிஷாவை, படத்தின் இயக்குனர் திருஞானம் அணுகியுள்ளார். அதற்கு திரிஷா மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பு சங்கத்தில் திரிஷா மீது திருஞானம் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளார் சங்கம், இது குறித்து திரிஷாவிடம் விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த திரிஷா தரப்பு, படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளது.