×

இந்தியில் ரீமேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

 

சாதிய ஒடுக்குமுறையை பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது. 

இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் எதிராக நடக்கும் அநீதிகளை இந்த படம் மூலம் வெளிக் கொண்டிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து பல்வேறு விருதுகளை குவித்தது. 

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. பிரபல நிறுவனம் ஒன்று இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. தமிழை போன்று இந்தியிலும் இந்த படம் வரவேற்பை பெறுமா என பொருந்திருந்து பார்க்கலாம்.