×

ஜனவரி முதல் அசுர வேகத்தில் தொடரப்போகும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோரை வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம்
 

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோரை வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இத்திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது.

கொரோனா காலகட்டதால் நின்றுபோன பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தீபாவளிக்கு பிறகு ஆரம்பமாக இருந்தது. ஆனால் நடிகர்கள் விக்ரம் உட்பட சிலர் தங்களது தேதிகளை சரிவர தராததால் படபிடிப்பு தள்ளிப்போய்கொண்டிருந்தது.

இந்த படத்தில் அருள்மொழிவர்மன் ஆக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலன் ஆக விக்ரமும் சுந்தரசோழர் ஆக அமிதாப்பச்சனும் வல்லவராயன் ஆக கார்த்தியும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் ஜனவரி மாதத்தில் ஷெடுல் கொடுத்துள்ளதால் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் ஹைதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வெற்றிகரமாக தொடங்குகிறது.இதனால் படவேலைகள் விரைவில் முடிந்து அடுத்த ஆண்டே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.