×

 சொத்துப் பிரச்சினை : செய்தியாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர் 
 

 

தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் மோகன் பாபு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும் விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களது குடும்பத்தில் சமீப காலமாக சொத்துப் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. 

மோகன் பாபு தனது மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனோஜும் அவரது மனைவி மோனிகாவும் 30 பேர்களை கொண்டு எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது மகன் மனோஜ் பேசுகையில், சொத்துக்காக போராடவில்லை, சுயமரியாதைக்காக போராடுகிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் தன் மீது தந்தை மோகன் பாபு தவறான குற்றசாட்டுகளை வைப்பதாக சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மனோஜும் மோகன் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.