×

மனம் கனக்கும் புகைப்படங்கள்: கதறி துடிக்கும் ‘பிரேமலதா விஜயகாந்த்’.

 

கேப்டன் விஜயகாந்தின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், அவரது உடலை பார்த்து கதறி அழும் பிரேமலதா விஜயகாந்தின் புகைப்படங்கள் மனதை கனமாக்கியுள்ளது.

சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக அதிரடி காட்டி வந்த விஜயகாந்திற்கு 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கேப்டன் அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். தொடர்ந்து தேமுதிக எனும் கட்சியை துவங்கி எம்.எல்.ஏவாகவும், எதிர்கட்சி தலைவராகவும் திறம்பட செயல்பட்டார். அடுத்து கட்சி சறுக்கலை சந்தித்தது, அப்போது அவரை தேற்றியவர் பிரேமலதா. கேப்டன் பாதையில் அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தவர் பிரேமலதா அவர்கள்.

 உடல்நிலை பாதிக்கப்பட்டு கேப்டன் சிகிச்சையில் இருந்த போதுகூட கட்சியை வழிநடத்தியவர் பிரேமலதா. சமீபத்தில் கூட தேமுதிக பொதுசெயலாலராக பிரேமலாத விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். இப்படி கேப்டனின் ஏற்ற இறக்க பாதைகளில் அவருக்கு துணையாக இருந்த பிரேமலாதா கேப்டனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.