×

ப்பா….. என்னா…..மனுஷய்யா இவரு!– ‘ருத்ரன்’ பட இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்த ‘ராகவா லாரன்ஸ்’.

 

ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட இசைவெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

 நடன இயக்குநராக பிரபலமான  ராகவா லாரன்ஸ், பலரையும் தனது மாஸ்டர் பீஸ் ஸ்டெப்புகளால் ஆட வைத்தார். தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்து, முனி, காஞ்சனா, காஞ்சனா 2  உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாது நடித்தும் இருந்தார். இதனை தொடர்ந்து  தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 ருத்ரன் படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன் சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக  நடைபெற்றது