×

46 வருடங்களுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன்- நினைவுகளை பகிர்ந்த ரஜினி

 

நெல்லையில் படப்பிடிப்புக்காக வந்த ரஜினிகாந்த், 46 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நெல்லை வந்துள்ளதாக, பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் பெயரை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி கலைஞர்களும் படத்தில் நடிக்கின்றனர்.