×

‘ஜெயிலர்’ படத்தை இப்படி வெளியிடுங்க... நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் கோரிக்கை !

 

‘ஜெயிலர்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென கோரிக்கை ஒன்றை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் திடீர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ‘ஜெயிலர்‘ திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதனால் அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் திரைப்படம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.