தல அஜித்தை தொடர்ந்து, பைக்குடன் இமயமலைக்கு பயணம் செய்த விஜய்யின் தந்தை…..
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் .ஏ. சந்திரசேகர் தற்பொழுது இமையமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தனது திரைத்துறை பயணத்தில் நடிகர் விஜயகாந்தை வைத்து பல வெற்றிபடங்கள் கொடுத்தாலும் ,விஜயை நடிகராக களம் இறக்கிய “நாளைய தீர்ப்பு” எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருந்த போதிலும் மனம் தளராமல் தனது மகனை வைத்து பல படங்களை இயக்கினார்.அதில் செந்தூரபாண்டி’ திருப்புமுனையாக அமைய அடுத்தடுத்து சாக்லேட் பாய் கதாபத்திரத்தில் நடித்து ,ஆக்க்ஷன் ஹிரோவாக உருவெடுத்தார் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய்-க்கு மிகபெரிய ரசிகர் பட்டாளாமே உள்ளது.