×

பா.ரஞ்சித் – சமுத்திரகனி இணையும் படத்தின் புதிய அப்டேட்… நாளை வெளியாகிறது…

பா.ரஞ்சித் – சமுத்திரகனி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிட உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாக திரையில் காட்டி புகழ் பெற்றவர் பா.ரஞ்சித். ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக இவர், மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு ‘நீலம்’ நிறுவனம் மூலம் சொந்தமாக படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. இதையடுத்து
 

பா.ரஞ்சித் – சமுத்திரகனி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிட உள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாக திரையில் காட்டி புகழ் பெற்றவர் பா.ரஞ்சித். ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக இவர், மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு ‘நீலம்’ நிறுவனம் மூலம் சொந்தமாக படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’  போன்ற வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது.

இதையடுத்து யோகிபாபுவின் பொம்மை நாயகி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கும் இப்படம் அரசியல் காமெடிப் படமாக உருவாக உள்ளது. பா.ரஞ்சித் தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து ’சல்பேட்டா பரம்பரை’  என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை சேர்ந்த குத்துச்சண்டை வீரரை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரைட்டர்’. சமுத்திர கனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டு தினமான நாளை காலை 11மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.