×

“போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது”- மன்னிப்பு கேட்ட  ஞானவேல்ராஜாவுக்கு பதில் கொடுத்த சசிகுமார்.

 

பருத்திவீரன் பட பஞ்சாயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இயக்குநர் அமீரிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் அதற்கு பதில் கொடுத்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்.

பருத்திவீரன் பிரச்சனை சில நாட்களாக உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ” திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது எம்மாதிரியான வருத்தம்? இதன் மூலமாக அமீர் அண்ணனுக்கு ஞானவேராஜா செல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?” என போலியான வருத்தத்திற்காக உண்மையை பலிகொடுக்க முடியாது என கேள்விகளை கேட்டுள்ளார் சசிகுமார்.