×

சூடுபிடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ படவேலைகள் -பிப்ரவரியில் படப்பிடிப்பு !

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘சாணிக் காயிதம்’ இதுவரை புதுமுகங்களை நடிகராகிய இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் தானே களமிறங்கி நடிக்கிறார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ரத்தக்கறையுடன் விரித்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன் போலீஸ் கஸ்டடியில் இருப்பதைப்போன்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
 

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘சாணிக் காயிதம்’

இதுவரை புதுமுகங்களை நடிகராகிய இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் தானே களமிறங்கி நடிக்கிறார்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ரத்தக்கறையுடன் விரித்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன் போலீஸ் கஸ்டடியில் இருப்பதைப்போன்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இந்த போஸ்ட்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படப்பிடிப்பிற்கான முதற்கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

‘சாணிக் காயிதம்’ படத்தை முடித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.