×

சென்னையில் செட் அமைத்து தலைவர்170 படப்பிடிப்பு 

 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.  இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்றது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றிருந்தனர். அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.