×

“எங்களை ‘மாவீரன்’ போல் உணர வைத்தவர் சிவகார்த்திகேயன்” - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி பதிவு !

 

‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் அருண் விஷ்வா நன்றி தெரிவித்துள்ளார். 

 மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் உரிமையாளர் அருண் விஷ்வா, ‘மாவீரன்’ வெற்றிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் சாந்தி டாக்கீஸ் ஆரம்பித்தபோது இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை வைத்து எனது முதல் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கவேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதன்பிறகு ஜீலை 14-ஆம் தேதி என்ற பெரிய நாள் வந்தது. அந்த நாளில் எது நடந்தாலும் சரிதான் என்று நினைத்திருந்தேன். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் அன்பும் பாசமும் உண்மையிலேயே மிகப்பெரியது. 

எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனால் தான். அவர் எங்களுக்கு பலத்தையும், நம்பிக்கையையும் தந்து நம் ஒவ்வொருவரையும் ‘மாவீரன்’ போல் உணர வைத்தார். அவர் என்னையும், மடோன் அஸ்வின் மற்றும் படக்குழுவினரையும் ‘மாவீரன்’ போல் உணர வைத்தார். அவர் என்னையும், மடோன் அஸ்வினையும், அவரது குழுவினரையும், அவருடைய பார்வையையும் நம்பினார். அந்த தந்த நம்பிக்கைதான் இன்று எங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறது. என் வாழ்வில் இப்படியோரு நண்பனை பெற்றதற்காக நான் நன்றியுடனும், பெருமையுடனும் உணர்கிறேன். உங்களையும், மற்றவர்களையும் ஒரே மாதிரியாக ஊக்குவிக்கும் ஒரு நண்பர் உங்களிடம் இருக்கும் போது உங்களுக்கு வேறு என்ன வேண்டும். சிவகார்த்திகேயன் நம்பிக்கைக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.