×

விஷால் நடிக்கும் 34-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

 

'மார்க் ஆண்டனி' படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.  ‌விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  அதோடு நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற உள்ளது