×

சிம்பு பட இயக்குனர் திடீர் மாற்றம்!

கன்னட படமான ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வந்தனர். கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்தன் என்பவர் தான் தமிழிலும் இயக்கி வந்தார். ஆனால் சிம்பு படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகிவிட்டார். அந்தப் படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிம்பு மீது புகாரளித்தார். பாதியில் நின்ற படம் தற்போது சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்துள்ளதால் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.
 

கன்னட படமான ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வந்தனர். கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்தன் என்பவர் தான் தமிழிலும் இயக்கி வந்தார்.

ஆனால் சிம்பு படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகிவிட்டார். அந்தப் படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிம்பு மீது புகாரளித்தார். பாதியில் நின்ற படம் தற்போது சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்துள்ளதால் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால் வேறு இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார். படத்தை ஏற்கனவே இயக்கி வந்த நார்தனுக்குப் பதிலாக தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் படப்பிடிப்புத் தேதிகளை மாற்ற வேண்டியிருந்தது. மேலும் நார்தனும் மற்றொரு படத்தில் கமிட் ஆகிவிட்டார். ஷூட்டிங் அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் நாங்களும் எங்கள் படத்திற்கான ஷூட்டிங்கை ஆரம்பிக்கத் திட்டமிட்டோம். நார்தன் வேறு படத்தில் பிசியாக இருப்பதால் இந்த ரீமேக்கை இயக்குனர் கிருஷ்ணாவை வைத்து முடிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படப்பிடிப்பு முடிந்ததும் நாங்கள் மப்ஃடி ரிமேக்கைத் தொடங்குவோம்” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.