×

‘பத்து தல’ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

‘ஜில்லுனு காதல்’ படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.