×

ரஜினியின் கதையில் சிவகார்த்திகேயன்... மீண்டும் இணையும் ‘டான்’ கூட்டணி !

 

 சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்ரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ‘பிரின்ஸ்’ படத்திற்கு முன்பு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்த திரைப்படம் ‘டான்’. லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படம் காமெடி மற்றும் அப்பா சென்டிமென்டில் உருவாகி அசுர வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். 

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியை அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினியை வைத்து சிபி சக்ரவர்த்தி, படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சிபி சக்ரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தியில்லாததால் படம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் ரஜினிக்கு சொன்ன கதையை வைத்து புதிய படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘டான்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து இந்த படத்தில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.