சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம் -ஏன் தெரியுமா ?
நடிகர் சிவகார்த்திகேயன் வசம் தற்போது பல படங்கள் இருக்கின்றன .இவர் தற்போது ஒரே நேரத்தில் மதராஸி படத்திலும் ,பராசக்த்தி படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் .பராசக்தி படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது .இந்நிலையில் திடீரென பராசக்தி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது .இது ஏன் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் , 'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி உள்ளன. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'மதராஸி' படத்தின் சில காட்சிகளை நடித்துக் கொடுப்பதற்காக சிவகார்த்திகேயன் சென்றதால் பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இதையடுத்து 'மதராஸி' படத்தின் காட்சிகளை முடித்து விட்டு மீண்டும் 'பராசக்தி' படக்குழுவுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்து வருகிறது .இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் ம்யூசிக் போடுகிறார் .