×

தீ விபத்தில் காயமடைந்த மகனை .. சிங்கப்பூரிலிருந்து அழைத்து வந்த பவன் கல்யாண்...!

 


தீ விபத்தில் சிக்கிய மகன் மார்க்கை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தார்.  

ஜன சேனா கட்சித்தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர், சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து நேரிட்டது. இதில் 19 மாணவர்கள் காயமடைந்தனர். மார்க் ஷங்கரின் கை மற்றும் கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது. மகனுக்கு காயம் ஏற்பட்டதை அறிந்த பவன் கல்யாண் சிங்கப்பூருக்கு சென்று மகனுடன் இருந்தார்.