×

பூஜையுடன் தொடங்கிய ‘சூது கவ்வும் 2’ படப்பிடிப்பு... யார் ஹீரோ தெரியுமா ? 

 

‘சூது கவ்வும் ’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பூஜையுடன் இன்று தொடங்கியது. 

வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘சூது கவ்வும்’. கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் வழக்கமான படம் போன்று இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். 

 இப்படத்தின் முழுகதை. வசனங்களும் திரைக்கதையும் ஒரு சாதாரண கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், பின்பு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. 

இந்தபடத்தை இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் சிவாவுடன் இணைந்து கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் சிவி குமார், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். திருக்குமரன் என்டர்டெயின்மைண்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.