×

“SPB-யின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும்”… நடிகர் பார்த்திபன்!

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுக்க கேட்கும் ஒரே பெயர் எஸ்பிபி. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. இன்னும் அதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை 6 மணிக்கு எஸ்பிபி-யின் ஏதேனும் ஒரு பாடலை ஒலிக்கவிட்டு கூட்டு பிரார்த்தனை
 

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுக்க கேட்கும் ஒரே பெயர் எஸ்பிபி. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. இன்னும் அதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை 6 மணிக்கு எஸ்பிபி-யின் ஏதேனும் ஒரு பாடலை ஒலிக்கவிட்டு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார். தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

“தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு. அப்படி SPB யின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைகளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் திரு SPB யின் இளமை ததும்பும் பாடல்களே !
காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட SPB யின் குரல் பத சதவிகிதம் கூடுதலே .
பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால் , 20/08/20 Thursday 6 PM In India – 8:30 AM in USA – 4 : 30PM in Dubai
அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி இசையுலகின் பெரும்புள்ளி நோக்கி…
அவர் மீண்டு வந்து நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த நம் இதயங்குவித்து பிரார்த்தனை செய்வோம் … அது SPB !
#Special Prayers > Balu ! “ என்று தெரிவித்துள்ளார்.