×

"முதல்முறையாக ரஜினி சாரை பார்த்​த​போது பிரமிப்​பு அடைந்தேன்"-இப்படி கூறும் முன்னணி நடிகை

 

ஷங்கர் இயக்கிய ‘சி​வாஜி: தி பாஸ்’ என்ற படத்​தில், ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்முறையாக ரஜினி சாரை பார்த்​த​போது பிரமிப்​பு அடைந்தேன். அவருடன் பணி​யாற்​று​வது முதல்முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன். இதனால், என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க வேண்டும் என்று, ஷங்​கர் சாரிடம் கேட்​டுக்கொண்​டேன். அதைக்கேட்டு அவர் சிரித்​தார். ஷங்​கர் சார், ‘ரஜினி சாரை சந்​தி​யுங்​கள்’ என்று சொன்​னதை கேட்​டதும் ஆச்​சரியப்​பட்​டேன். அந்த நேரத்​தில், ‘வாஜி வாஜி’ என்ற பாடலுக்​கான ஒத்​தி​கை​யும், அதை தொடர்ந்து படப்பிடிப்​பும் நடந்து கொண்​டிருந்​தது.

படப்​பிடிப்​பின்​போது, ரஜினி சார் என்னை இயல்​பாக உணர வைத்​தார். ஒரு நெருங்​கிய நண்​பரை போல் என்​னிடம் பழகி​னார். அந்த படத்தில் மிக​வும் சுவாரஸ்​ய​மான மனிதர்​களு​டன் பணியாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது, எனக்கான அதிர்​ஷ்டம். ரஜினி சார் எளிமை​யானவர். படப்​பிடிப்​பு தளத்​துக்கு வரும்​போது எல்​லோரை​யும் சமமாக நடத்​து​வார். அவருடன் இணைந்து பணி​யாற்றியது, வாழ்நாளில் எனக்கு மிகச்சிறந்த அனுபவ​மாக இருந்​தது.