×

கொடைக்கானல் ஷூட்டிங்கை முடித்த சூர்யா... 'கங்குவா' அடுத்து எங்கு தெரியுமா ?

 

சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா முதல்முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மிரட்டலாக நடித்து வரும் இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

 இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப்பகுதியில் நடைபெற்று வந்தது. அடந்த காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.  

இந்நிலையில் கொடைக்கானல் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த படப்பிடிப்புடன் ப்ரீயட் பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் பிரம்மாண்டமாக செட்டில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது‌. அடுத்த வாரம் நடைபெறும் இந்த படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.