×

சூர்யாவை இயக்கும் பிரபல மலையாள நடிகர்... மீண்டுமொரு பயோபிக் ஸ்டோரி !

 

நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை பிரபல மலையாள நடிகர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் கலக்கி வரும் சூர்யா, தற்போது தென்னிந்திய மொழிகளில் கால்தடம் பதிக்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகும் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவில் உள்ள மொத்தம் 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூரரைப்போற்று'. பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டுமொரு பயோபிக் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். பிரபல பிஸ்கட் கம்பெனியான பிரிட்டானியா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜன் பிள்ளை பயோபிக்கில் தான் சூர்யா நடிக்கவுள்ளார். இதில் ராஜன் பிள்ளையாக சூர்யா நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இப்படத்தை மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கவுள்ளார். இதற்கான சந்திப்பு தான் சமீபத்தில் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிபர்' திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.