×

'தி கேரள ஸ்டோரி' நாளை தமிழகத்தில் வெளியாகுமா ?.... தயங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் !

 

'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையல ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'தி கேரள ஸ்டோரி'. சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவில் மிகப்பெரிய  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. இந்த படத்திற்கு அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.‌

கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

நாளை வெளியாக உள்ள இந்த படம்‌ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்த படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுப்பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.‌ இந்நிலையில் இந்த படத்தை வெளியிட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என கூறப்படுகிறது. அதேநேரம் 'தி கேரள ஸ்டோரி' படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.