×

விபத்தால் தடைபட்ட கங்குவா படப்பிடிப்பு தொடக்கம்

 

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து, நடிகர் சூர்யா காயம் அடைந்தார். ஈவிபி பிலிம் சிட்டியில், நடந்த படப்பிடிப்பில், 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்ததில், சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்தானது. இந்நிலையில், தடைபட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி குறிப்பிட்ட காட்சி நிறைவு செய்யப்பட்டதாக படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.