×

இயக்குனர் அவதாரம் எடுக்கும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலக்ஷ்மி சரத்துக்குமார் ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் கோலிவுட்டில் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தேர்ந்த நடிகையாக உருவெடுத்துள்ளார். வெறுமனே ஹீரோயின் என்றால் காதல் செய்யவேண்டும், பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டும் என்றல்லாமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் பாலா இயக்கத்தில்
 

நடிகை வரலக்ஷ்மி சரத்துக்குமார் ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கோலிவுட்டில் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தேர்ந்த நடிகையாக உருவெடுத்துள்ளார். வெறுமனே ஹீரோயின் என்றால் காதல் செய்யவேண்டும், பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டும் என்றல்லாமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம், தான் செல்வாக்கால் அல்ல, நடிப்பால் தான் வெற்றிநடை போடப்போகிறேன் என்று நிரூபித்தார். அதன் பிறகு விக்ரம் வேதா, சர்கார், மாரி 2 உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பெரும்பாலும் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ‘டேனி’ என்ற படம் ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கண்ணாமூச்சி என்று அந்தப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை பாலிவுட் நடிகை லட்சுமி மஞ்சு வெளியிட்டார். ஆனால் போஸ்ட்டரை வெளியிட்ட சில நேரத்திலே அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாவதில் படக்குழு மற்றும் லட்சுமி இடையே எதோ குழப்பம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. வரலட்சுமி இன்று தான் படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருந்தார். ஆனால் லட்சுமி நேற்றே வெளியிட்டுவிட்டார் போல.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி பேசும் பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் வரலட்சுமியே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

நடிப்புத்திறமையால் நம்மைக் கவர்ந்த வரலட்சுமி இயக்கத்திலும் சிறப்பு செய்வார் என்று எதிர்பார்ப்போம்!