×

நயன்தாராவுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கிய விக்னேஷ் சிவன்

 

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிசியான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது என அறிவித்தனர். தனது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் தெய்விக் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளார். அவ்வெப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு வருகிறார். 

இதனிடையே, நடிகை நயன்தாரா கடந்த 18-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான இயக்குநர் விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் காரை அவர் வழங்கியுள்ளார். இந்த காரின் புகைப்படத்தை நயன்தாரா பகிர்ந்துள்ளார்