×

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணமாகி எந்த கோவிலுக்கு போனார்கள் தெரியுமா ?

 
கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம், இருவீட்டு பாரம்பரிய முறைப்படி நடந்தது.  ஐதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது . இந்நிலையில், திருமணத்துக்கு பிறகான கொண்டாட்டங்களும், பாரம்பரிய சடங்குகளும் நடந்து வருகின்றன.
தெலங்கானா மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகிலுள்ள விஜய் தேவரகொண்டாவின் மூதாதையர் கிராமமான தும்மல்பேட்டாவிலுள்ள சத்யநாராயணசாமி கோயிலில் மணமக்கள் பூஜை செய்தனர். அவர்களது வருகையையொட்டி கிராமத்துவாசிகள் மிகப் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளித்தனர். அந்த கிராமத்தில் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் வீடு கட்டியுள்ளனர்.