×

சர்ச்சை கருத்து - வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் தேவரகொண்டா...!

 

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.  

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் ரெட்ரோ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள் எனக் கூறியிருந்தார். அவர் பேசியது சர்ச்சையான நிலையில் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பழங்குடியினர் குறித்து இழிவான கருத்துகளை விஜய் தேவரகொண்டா தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.