×

விரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி பட அறிவிப்பு... தலைப்பு குறித்து முக்கிய அப்டேட் !

 

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தலைப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஏராளமான படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நட்டி (எ) நட்ராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு மகாராஜா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.